பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

வர்கள் கோனேரிராவ், வீராசாமிராவ் என்னும் அயன் ராஜ பார்ட்டு நடிகர்களும் சுந்தரராவ், குப்பண்ணராவ் எனும் அயன் ஸ்திரீ பார்ட் நடிகர்களுமாம். இவர்களெல்லாம் கொஞ்ச காலத்திற்குப் பிறகு மனமோஹன நாடகக் கம்பெனியை விட்டுப் பிரிந்து தாங்கள் ஏற்படுத்திய சொந்த நாடக கம்பெனிகளில் பெரும்பாலும் நடிக்க ஆரம்பித்தனர். இதுவே கோவிந்தசாமிராவின் நாடகக் கம்பெனி கலைந்து போனதற்கு முக்கிய காரணம். தனது கம்பெனி கலைந்த பிறகு சுந்தர ராவ் முதலியோருடைய கம்பெனிகளில் தான் சூத்திரதாரனாக இருந்து சில வருடங்கள் நடத்தி வந்தார். கடைசியாக பாலாமணி நாடகக் கம்பெனியில் சூத்திரதாரனாக ஊதியம் பெற்று தமிழ் நாடகத்திற்காக உழைத்தனர். ஆகவே ஆயுள் பர்யந்தம் தமிழ் நாடகத்திற்காகவே உழைத்தனர். என்று ஒருவாறு கூறலாம்.

திரு. பஞ்சநாத ராவ்

இவர் கோவிந்தசாமிராவ் கம்பெனியில் ஆதி முதல் கடைசி வரையில் விதூஷகனாக நடித்தவர். அதில் நல்ல பெயர் பெற்றவர். கதை ஆரம்பமாகு முன் படுதாவுக்கு முன்பாக இவர் தலையில் வேப்பிலையை கட்டிக் கொண்டுவந்து அக்காலத்திய மராட்டிய கம்பெனிகளின் வழக்கப்படி கூத்தாடி விட்டு எதிரிலிருக்கும் சூத்திரனுடன் வேடிக்கையாய் பேசுவார். இவர் சமயோசிதமாய் வேடிக்கையாய் பேசுவதில் மிகவும் நிபுணர், அதற்கு ஒரு உதாரணம் மாத்திரம் இங்கு எழுதுகிறேன். ஒரு சனிக்கிழமை நாடகம் 9 மணிக்கு ஆரம்பம் என்று பிரசுரம் செய்திருந்த போதிலும் பத்து மணி வரையில் கோவிந்தசாமிராவ் வரவில்லை. அதற்கு மேல் அவர் வந்த போது ஜனங்கள் கொஞ்சம் கலகம் செய்ய, பஞ்சநாதராவ் தன் கையால் அவர்களை அமர்த்தி விட்டு கோவிந்தசாமிராவ் அவர்களுடன் பேசியதை இங்கு எழுதுகிறேன். "இப்படி வாருங்களையா, நீங்கள் தானே இந்த நாடக சூத்திரதாரர் 9 மணிக்கு ஆரம்பம் என்று பிரசுரம் செய்து விட்டு 10 மணிக்கு மேலாகவா ஆரம்பம் செய்வது? இது. சென்னைப்பட்டணம் தெரியுமா? தஞ்சாவூர் நாட்டுப்புறமல்ல, அங்கு நடப்பது போல் இங்கு நடக்கலாகாது, இப்படி நீங்கள் காலதாமதம் செய்ய ஆரம்பித்தால் உங்கள் கம்பெனியின் பாயை, சுருட்டிக் கொண்டு தஞ்சாவூர் போய் சேரவேண்டியது தான், கபர்தார்!" என்றார். இதைக் கேட்டவுடன் வந்திருந்த ஜனங்கள் நகைத்து