பக்கம்:நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இத்தகு வருந்தத்தக்க நிலைமைக்கு மத்திய சர்க்கார் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதை கண்டு பிடித்தாகவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மத்திய சர்க்காரின் கட்டுப்பாடோ அல்லது ஆய்வுரைகளோ ஏதுமின்றி, விலைவாசிகளின் உயர்வைத் தடுக்க வழிவகைகள் காண மாநில சர்க்கார் உரிமைபெற்றிருக்க வேண்டும்.

மத்திய சர்க்கார் அளவுக்குமீறிய செல்வாக்கையும், அதிகாரங்களையும் கொண்ட ஒரு உயர்ந்ததோர் அங்கமாக இருக்கின்ற காரணத்தால், தேவைக்கான மனுப்போடுகின்றபோது அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கேட்கப்பட்டால் உணவுத்தானியங்களைக் கொள்முதல் செய்யவேண்டும்.

எனவே உணவுத்துறையைப் பொறுத்த வரையில் எப்படியிருந்தாலும் மத்திய சர்க்கார் தலையீடு இன்றிய சுய உரிமை இருக்க வேண்டும்.

நிலவளத்தைப் பொறுத்து உணவு உற்பத்தி இருக்கின்ற காரணத்தால் நிலத்தை வளமாக்குவதற்குண்டான வழித்துறைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கட்டுப்படுத்தவேண்டும்.

நீர்ப்பாசனம், உரவகைகள், விதைகள் இன்னும் இதுபோன்றவைகள் விவசாயத்திற்கு இன்றியமையாத தேவைகளாகும். ஆனால் இவைகளைப் பொறுத்த வரையில் கூட விநியோகிக்கக்கூடிய அதிகாரத்தை மாநில சர்க்கார் பெற்றிருக்கவில்லை. அல்லது அதிலும் பல்வேறுவிதமான தொல்லைகள், இடுக்கன்கள் மாநில சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கிறது.

பெரிய நீர்பாசனத் திட்டங்கள் மாநில சர்க்காரால் நிர்மாணிக்கப்பட்டாலும், துவக்க காலத்தில்கூட மத்திய சர்க்காரின் துணையும் உதவியும் தேவைப்படுகிறது.

சிறு நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில சர்க்கார் தாராளமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.