பக்கம்:நாயகர் பெருமான்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பிறகு மற்றவரைப் பற்றிச் சிந்தியும்!” என்று எள்ளி நகையாடினார் அவர்.

உமர் நேராகத் தம் சகோதரியின் வீடு சென்றார். கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே அவர் சகோதரியும் மைத்துனரும் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருந்தனர். உமர் கதவைத் தட்டினார். அவர் குரல் காதில் விழுந்தவுடன், அவர் சகோதரி திருக்குர்ஆன் எழுதி யிருந்த தாள்களை ஒளித்து வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தார்.

உள் நுழைந்த உமர் கடுங்கோபத்துடன் “இப்போது சற்று முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என் காதில் விழுந்தது என்ன?” என்று கேட்டார்.

சினம் பொங்கும் அவர் விழிகளைக் கண்டு அஞ்சிய அம்மையார் “ஒன்றும் இல்லை” என்று கூறினார்கள் “இல்லை, நீங்கள் மதம் மாறிவிட்டீர்கள்!” என்று சீறிக் கொண்டே தம் மைத்துனரை அடிக்க முற்பட்டார் உமர். கணவனைக் காப்பாற்ற வந்த அவர் சகோதரி அவ்வடியை ஏற்றுக் கொண்டார். அடி பலமாக விழுந்ததால் அப்பெண்மணிக்கு இரத்தக் காயம் ஏற்பட்டது.

அப்படியிருந்தும், சற்றும் கலங்காமல், “உமர், என்ன செய்தாலும் இஸ்லாம் எங்கள் மனத்தை விட்டு அகலாது” என்று உறுதியுடன் கூறினார். காயத்தின் வழியே குருதிபாய்ந்தோடும் அந்நிலையிலும்