பக்கம்:நாயகர் பெருமான்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

ஆதரவில் வளரத்தான் உயிருள்ள போதே ஏற்பாடு செய்ய வேண்டு மென்று கருதினார் அன்புப் பாட்டனார்.

அப்துல் முத்தலிப் அவர்கள், தாம் அருமை மைந்தர்கள் அனைவரையும் ஒருநாள் அழைத்து இது குறித்து ஆலோசனை செய்தார்கள்.

முதலில் அபூலஹப் எனும் மைந்தர் குழந்தையை வளர்க்கும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்வதாக மனமுவந்து கூறினார். ஆயினும் பெருமானவர்களை அவரிடம் ஒப்படைக்கப் பாட்டனாரின் உள்ளம் இசையவில்லை.

“மகனே, நீ பணக்காரன். பணக்காரர்களுக்கே இயல்பாயுள்ள கல்மனம் உன்னிடம் இருக்கக் காண்கிறேன். கண்டிப்பான உன் இயல்பினால், தாய் தந்தையற்ற இக் குழந்தை கண்கலங்க நேரிடுமென அஞ்சுகின்றேன். ஆதலால் உன்னிடம் இப் பொறுப்பை ஒப்படைக்க நான் விரும்பவில்லை” என்று அம் முதியவர் கூறிவிட்டார்.

இரண்டாவதாக ஹஸ்ரத் ஹம்சா அவர்கள், பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உடன்பட்டார்கள். அவரிடம் பெருமானவர்களை ஒப் படைக்கவும் அவருடைய பாட்டனாருக்கு மனம் வர வில்லை.

“மகனே, உனக்குப் பிள்ளைகளே யில்லை, ஆகையால் பிள்ளையின் அருமையை நீ உணர மாட்-