பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 நாயன்மார் கதை

ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கடையில் இருந்த அவனி டம் கொண்டு வந்து கொடுத்தார். அவற்றை வாங்கித் தன் வீட்டுக்கு அனுப்பி வைத்தான் அவன். அந்த இரண்டு கனிகளேயும் புனிதவதியார் வாங்கி வைத்துக் கொண்டார்.

அப்போது ஒரு சிவனடியார் மிகவும் பசியுடன் அங்கே வந்து சேர்ந்தார். மிக்க வாட்டத்துடன் இருக்கும் அவர் பசியை உடனே ஆற்ற வேண்டும் என்று எண்ணினர் புனிதவதியார். ஆனல் அப்போது அன்னம் மாத்திரம் சித்தமாக இருந்தது; கறியமுது ஆகவில்லை. இருப்பினும் அடியவருடைய பசியை அறிந்து உடனே இலையைப் போட்டு உணவு பரிமாறத் தொடங்கினர். தம் கணவன் அனுப்பியிருந்த மாம்பழங்களில் ஒன்றை வெஞ்சனமாக இட்டார். அடியார் வயிருர உண்டு அம்மையாரை வாழ்த்திவிட்டுச் சென்ருர். -

நண்பகலில் வழக்கம்போல் கடையிலிருந்து பரம தத்தன் வீட்டுக்கு வந்தான். நீராடிவிட்டு உண்ண உட் கார்ந்தான். இலையில் எல்லாம் படைத்துவிட்டு அவன் அனுப்பிய மாம்பழங்களில் எஞ்சியிருந்த ஒன்றை இட்டார் புனிதவதியார். அந்தக் கனியை உண்ட வணிகன் அது மிகவும் சுவையுள்ளதாக இருப்பதை அறிந்து, எங்கே, மற்ருெரு பழம் இருக்கிறதே; அதையும் கொண்டு வந்து

வை' என்ருன்.

அம்மையார் அதை எடுத்து வருவதற்காகச் செல்ப வரைப்போல உள்ளே போனர். உள்ளே பழம் ஏது? இேவர் ஆசைப்பட்டுக் கேட்கிருரே! நான் என் செய்வேன்? என்று அப்போது புனிதவதியாருடைய உள்ளம் தத்தளித் தது. அவருடைய நிலை கண்டு இரங்கின்ை சிவபெருமான். அவனருளால் ஒரு மாங்கனி அம்மையாருடைய கையில் வந்திருந்தது. இறைவன் திருவருள் இருந்தபடி என்ன ஆச்சரியம்' என்று எண்ணிய அம்மையார் அதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/120&oldid=585614" இலிருந்து மீள்விக்கப்பட்டது