பக்கம்:நாயன்மார் கதை-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாயன்மார் கதை

மிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும் பெரிய புராணத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்கு ஏற்ற பெருமையை உடையது; நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச்சுவையும் பக்திரசமும் துளும்ப உரைப்பது. சேக்கிழார் இயற்றியது பெரியபுராணம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் சேக்கிழாரை.

“பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப்
பாடிய கவிவலவ”

என்று பாராட்டுகிறார்.

இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர் சேக்கிழார்; சென்னையை அடுத்த குன்றத்தூரில் தோன்றினவர். சேக்கிழார் என்பது அவருடைய குலப்பெயர். அருள்மொழித்தேவர் என்பது இயற்பெயர். அவர் சோழ அரசனுடைய மந்திரியாக இருந்து விளங்கினார்.

இலக்கியங்களில் ஈடுபாடுடைய சோழ அரசன் சிவனடியார்களின் வரலாற்றைக் காப்பியமாகப் பாட வேண்டுமென்று விரும்பினான். அவனுடைய விருப்பத்தின்படியே சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தைப் பாடத் தொடங்கினார். சிதம்பரத்துக்கு வந்து இறைவனுடைய சந்நிதானத்தில் இருந்து அதைப் பாடி அரங்கேற்றினார்.

தேவாரப் பாடல்களில் ஆழ்ந்த ஆராய்ச்சியும், தமிழ்நாட்டு ஊர்களைப் பற்றிய அறிவும் சேக்கிழாருக்கு நிரம்ப இருந்தன. சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத்-

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாயன்மார்_கதை-1.pdf/7&oldid=1404815" இலிருந்து மீள்விக்கப்பட்டது