பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

105



கொல்லன் உலைக்களத்தைப் பார்; அதில் சுட்டுக் காய்ச்சப்படும் இரும்பும் அதைப் பிடிக்கும் சூட்டுக் கோலும் இணைபிரிவது இல்லை; காய் எரி புகுந்து கனத்த சூட்டில் இரண்டும் பதன்படுகின்றன. சூட்டைக் கண்டு ஒன்றை விட்டு ஒன்று விலக முற்படுவதில்லை; ஆனால் அதைப்பிடிக்கும் குறடும் அடிக்கும் சம்மட்டியும் பிரிந்து விடுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் வளம் சுருங்கிய காலத்தில் ஒட்டி உறவாடுவர்; பதுங்கும் பண்பினை உடைய நண்பினர் சமயம் வரும்போது நெகிழ்ந்து தப்பித்துச் சென்றுவிடுவர். பழகுகிறவர் எல்லாம் பண்பினர் என்று கொள்ளுவதற்கு இல்லை; இளகுகிறவர் நம்மோடு இணையும் சுற்றத்தினரே ஆவர்.

இறுதிவரை நம்மோடு இணைந்து உறுதியாக உதவுவார் என்று நம்பி ஒருசிலரை நயக்கின்றாய்; மறுமைக்கும் அவர்கள் பெருமை தேடித் தருவர் என்று கருதுகிறாய். வாழும்போது நம் இன்பத்தில் பங்கு கொள்கின்றனர். ஆனால் துன்பத்தில் நெகிழ்ந்து விடுகின்றனர். மண் குதிரை; இவர்களை நம்பி வேகமாகச் செல்லும் வெள்ளத்தில் பயணம் செய்ய இயலாது. பங்குச் சந்தை சரிந்துவிட்டால் அங்குப் போடும் பணம் அரோகராதான். தங்கும் இன்பம் நிலைக்கத்தக்க சுற்றத்தினரை நயக்க; அவர்கள் பயன்படுவர்.

இருந்து முகம் திருத்தி ஈர்க்குக் கொண்டு பேன் வாங்கி விருந்து வந்திருக்கிறது என்று சொன்ன அளவில் அவள் பேயாடுகிறாள்; அத்தகைய வீட்டில் ஏதோ புத்தி தடுமாறி அழைப்புத் தந்து கொழுக்கட்டை போட்டுக் காய்கறிப் பொறியல் வைத்து “அடிகளே அமுதம் உண்க” என்று படி இறங்கி அழைத்தால் நீ உள்ளே நுழைந்தால்