பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


பார்க்கும் மரம்தான் காய்க்காது. அல்சேஷன் நாய்போல் அதனை அடிக்கடி கவனிக்க வேண்டும். கடை மக்கள் நட்பு பாக்கு மரம்; அவ்வப்பொழுது அவர்களுக்கு ஊக்கத் தொகை தந்து நட்பு ஆக்க வேண்டும்.

தென்னை மரம் ஒருமுறை நீர் ஊற்றினால் அஃது உன்னை மறக்காது; நெடுக வளர்ந்தாலும் அதன் புத்தி குறுகவே குறுகாது. காய் தரும். இடைப்பட்டவர் ஒரு முறை தரும் உதவிக்கு வாழ்நாள் வரை நன்றி காட்டுவர்.

பனை மரம் தானே வளரும்; தானே காய்க்கும் தானே தரும்; பிறர் உதவிக்கு அது கை நீட்டுவதில்லை. வள்ளல் சாதி அது. அத்தகைய நட்பை உள்ளுக; இவர்களே தலையாய நட்பினர்.

அரிசி களைந்த கழுநீர்; அதுதான் அப்பொழுது கிடைத்தது; நல்லநீர் கொண்டுவர அவள் நாலுகாதம் செல்ல வேண்டி இருக்கிறது; கறிகாய் அதைப் பறி என்றால் அதனை அறியேன் என்கிறாள். பசிக்குச்சோறு; புசிக்க வேறு தேவைப்படுகிறது. கொல்லைப் புறத்துக் கீரை அதனைப் புளியும் உப்பும் சேர்த்து அரைகுறை யாக வேக வைத்து ‘உண்க அடிகளே’ என்று அமுத மொழி பேசிப் பரிமாறுகிறாள். சூடாக இருக்கிறது உணவு, குளிர்கிறது அவள் வார்த்தைகள். அமுதம் என்று கூறி அக மகிழ்வோடு உண்கின்றனர் வந்த விருந்தினர்; அகம் நக ஒளிவிடும் நட்பு இது.

தடபுடலான வரவேற்பு; புடலங்காய்க் கூட்டு; எல்லாம் வெத்து வேட்டு, நீளம் அடி நான்கு தலைவாழை இலை; பரபரப்பு; சுறுசுறுப்பு, சலசலப்பு.