பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

109


எல்லாம் அடுக்கி வைக்கப்படுகின்றன. எடுத்து இட ஆள் இல்லை; நட்சத்திர உணவகம்தான்; அலுத்து விடுகிறது. இதுவல்ல நட்பு; இது வெறும் நடிப்பு.

நாய்க்கால் சிறுவிரல்களை எப்பொழுதாவது கவனித்தது உண்டா? அவை சேர்ந்தே இருக்கும். பிரிக்கவே முடியாது. அழகான உவமை. அதுபோல் சேர்ந்தே இருப்பர்; அவர் நட்பர். ஆனால் ஈய்க்கால் அளவு உதவ வாய்க்கால் அங்கே சிறிதும் ஏற்படாது. பேய்க்கால் அவர்கள் உறவு; நிலைத்து ஊன்றி நிற்காது. சேண் தூரம் இருந்துதான் கொண்டு வரவேண்டும் வாய்க்கால் நீர்; அது வயலில் விளைக்கும் செந்நெல்; வாழ்வு அளிக்கும். அத்தகையவர் உயர் நட்பினர் ஆவர்.

நல்லது நான்கு நவின்றால் நீ செவி கொடுத்துக் கேட்பாயா? கேள். தெளிவில்லாத முரடர் அவர் நட்பைவிட அவர்கள்பால் கொள்ளும் பகைமை தகைமை, நோய்வாய்ப்பட்டு நொந்து நித்தம் நித்தம் சத்தம் இட்டுக் கொண்டிருப்பதைவிட மொத்தமாக உயிர்விடுவது உயர்வு ஆகும். பண்பட்ட நண்பரைப் புண்பட்ட சொற்களில் தாக்குவதைவிட அவரை அடித்துக் கொன்றுவிடு; இல்லாததைச் சொல்லி நல்லவர் இவர் என்று நற்சொல் கூறி மேலுக்குப் புகழ்வதைவிட வசைச் சொற்கள் நான்கு பேசிக் கற்கள் வீசுவதைப் போலக் கடிந்து உரைப்பது கவின்மிக்க செயலாகும்.

நட்பைத் தேடும்போது நாள்பல ஆயினும் நயத்தக்கவரை நாடி நட்டாகக் கொள்க. பாம்போடு உறவு கொண்டாலும் பிரியும்போது அது வேம்பாக அமையும். பிரிய மனம் வராது; அதனால் தீயவர் நட்பு தவிர்க. அவர்களைப் பின் விட்டு விலக இயலாது.