பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



பகைவர் அவர்கள் நமக்கு மிகைவன செய்வர் எனினும் அவற்றை மிகைப்படுத்தி வருந்தற்க; அறியாமை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்று அவர்களை மன்னித்துவிடு; தூயவர் ஆகிய நல்லோர் தவறுகள் செய்துவிட்டார் என்றாலும் அவர்கள் தெரிந்து செய்தவை என்று கொள்வது தவறு ஆகும். நண்பனோ, பகைவனோ, யாவனோ எவனாயினும் என்ன? நட்பின் வகை அறிந்து அவர்கள் தகைமையைப் போற்றிப் பழகி வாழ்வதே சிறப்பு ஆகும்.

ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டு அது சேறு என்று கூறினால் அது யார் தவறு? குறை நிறைகளை ஆய்ந்தே நிறை உடையவர் என்று கண்டபின்பே நண்பனைத் தேர்ந்து எடுக்க வேண்டும். தாலி கட்டிக் கொண்ட பிறகு வேலிபோட்டுக்கொண்டு விவாகரத்துக் கோருவது விவேகமன்று. ஏறக்குறைய நல்லது பொல்லது பார்த்து அறுத்துக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்வது நட்பிற்கு அழகாகும். செறிவுமிக்க நட்பு என்றால் பிரிவு அதனைத் தாக்காது.


24. கழுத்தறுப்புகள்
(கூடாநட்பு)

இருக்கும் வீடு ஓலையிட்ட கூரை, அது கிழிச்சல்; சுவர்கள் கசிவு; நீர் அதனைக் குளிர்சாதன அறை ஆக்குகிறது; தரை சேறு, சறுக்கி விளையாடலாம்; வெள்ளம் அணை தேடிக் கதவை முட்டுகிறது. நீர்ப்பஞ்சம் இனி இருக்காது; ஏன் வீடே அடித்துச்