பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


நிதானமாகச் செய்யத்தக்க காரியங்களையும் செய்யாது ஏய்க்கிறான் “இதோ இன்று; அதோ அன்று” என்று என்றும் பேசிக் காலம் கழிக்கும் குன்று.அவன். அவனைச் சுற்றிக் கொண்டிருப்பது நன்று அன்று; நட்புதான் ஆனால் அதுகூடாத ஒன்று; பயனற்றது.

தொட்டகுளம் ஒன்றுதான்; வெட்ட வெறிச்சம்; அதில் கழுநீர்ப்பூவும் ஆம்பலும் பக்கத்துப் பக்கத்துக் குடி வாசிகள்தாம்; கழுநீர் வழுவுடையது; ஆம்பல் விழுப்பம் மிக்கது; வாசனைகள் வேறு; இது அது ஆகாது. அது இது ஆகாது. கீழோர் கீழ் மக்கள் தாம்; மேலோர் மேவ்மக்கள் தாம். பிறப்புக்குணம் அவரவர் களை விட்டுவிலகாது; அத்தகையவர் உறவு உனக்கு ஆகாது.

குட்டிக் குரங்குதான்; அது தன் நெட்டைத் தந்தையுடன் ஒட்டி உறவாட மறுக்கிறது.தந்தைக் குரங்கு கையகத்துப் பலாவைத் தட்டிப் பறித்துச் செல்கிறது. அப்பனுக்கும் மகனுககும் எவ்வளவு நெருங்கிய ஒற்றுமை; மட்டு மரியாதை மறந்துவிட்டால் இனி அப்பன் என்ன சுப்பன் என்ன? உறவு ஒட்டவில்லை என்றால் எட்டிப் போவது நல்லது.

ஆபத்துக்கு உதவாத அவன் பாவத்திற்கும் அஞ்சமாட்டான். உயிரையும் தந்து காப்பதாக உறுதி கொடுத்த தோழன் பெயரையும் கூறாமல், “வந்தது சொல்ல வேண்டாம்” என்று இவன் படுக்கையில் கிடந்தாலும் நெகிழ்ந்து விடுகிறான். “இவன் எல்லாம் உன் தோழன்” என்று ஆழமான நட்பைக் காட்டினாயே அவன் உன்னைக் குழி தோண்டிப் புதைக்கும்போது