பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

115


விழிகளில் நீர்மல்க வந்து அழுது நடிப்பான்; துடிப்பான்; பழம் நட்புப் பேசிப் படிப்பான்; கவலைப்படாதே! அழுவதற்கு ஒரு ஆள் இருக்கிறான்.

நன்மை கருதும் நண்பனைக் கைவிட்டு விட்டு நயமாகப் பேசி நடிக்கும் புன்மையனை நயப்பது நெய் ஊற்றும் கிண்ணத்தில் அதை நீக்கிவிட்டு வேம்பு அதன் நெய் நிரப்புவது போல் ஆகும். இனிமை கெடுகிறலு: கசப்புப்படுகிறது. தீய நட்பு நீக்குக; கட்டுவிரியன் காட்சிக்கு அழகு தருவது; அதனோடு பிணை இணைகிறது; இறுதியில் ஆண் நாகம் அதனை அறவே விட்டு விலகுகிறது. நண்பர்கள் நயமாக உரையாடுவர்; கவர்ச்சிமிக்கவராகக் காணப்படுவர். புகழ்ச்சிக்கு உரியவர் போல் தோற்றம் அளிப்பர். ஆனால் எந்த அளவும் நன்மை செய்யமாட்டார்கள். இவர்கள் கட்டு விரியன்கள்; நாமே தேடிக் கொள்ளும் சனியன்கள். குடிக்கும் பால் என்று நினைத்தால் அவர்கள் வெறும் கலப்படம்தான்; தண்ணீர்தான் புலப்படும்.


25. அறிவே ஆக்கம் தரும்
(அறிவுடைமை)

அறிவு என்பது அறிந்து செயல்படுதல்; எப்பொழுது எது செய்தால் அது நன்மை தருமோ அப்பொழுது அதனைச் செய்வது அறிவுடைமையாகும். முளையிலே களைந்துவிடலாம் என்று பகைவன் மெலிந்திருக்கும் நிலையில் அவனைத் தாக்குவது தற்காலிக வெற்றி தரலாம். “நொந்து கிடப்பவனை இவன் நோகடித்தான்” என்று இந்த உலகம் பழிதூற்றும்;