பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

117



வேப்பம் இலை நடுவே வாழை பழுக்கிறது என்றாலும் வாழை தன் இனிமையை இழக்காது. மோப்பம் பிடிக்கும் நாய் போன்ற இழிந்த இனத்தவர் ஒரு சிலர் ஒருவனைச் சுற்றிக் கொண்டாலும் அவன் சுய அறிவு இயல்பாக உடையான் தன்சால்பு குறையான்.

சொந்த புத்தி கெடாமல் இருக்கும்போது ஒருவன் யாரோடு சேர்ந்தால் என்ன? பழகினால் என்ன? அவன் மனம் உறுதியாக இருக்கும்போது அவனை மடத்தனம் வந்து ஒன்றும் செய்யாது; கடற்கரைதான்; நீர்தோண்டிப் பார்த்தால் நல்ல குடி தண்ணணீர் ஊறுகிறது; மலைப்பகுதி தான்; அங்கே உப்புத் தண்ணீர் சில சமயம் சுரக்கிறது; வியப்பாக இல்லையா? நிலத்தியல்பால் நீர் திரியும் என்பார் வள்ளுவர். நீர் தன் நிலை கெடாமல் இருக்க வாய்ப்பு உள்ளது என்று நாலடியார் கூறுகிறது; புதிய கருத்து. இரண்டும் இரு கண்ணோட்டங்களில் உண்மையானதுதான்; கெடுவதற்கு வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட வாய்ப்பு உண்டு; கெட வேண்டும் என்பது நியதி இல்லை; மாறுபட்ட கருத்துக்கள் அல்ல; துணை நிற்பன இவை.

நட்பு என்பது பூப்போன்றது; அது மலர்ந்து இருந்தால் தான் மணம் வீசும்; பூ வாடிவிட்டால் அதனை யாரும் நாடார். நட்பு அஃது ஒட்பு உடையது; எடபொழுதும் ஒரே தன்மையது; கூம்பலும் மலர்தலும் இல்லாமல் ஒரு பூ இருந்தால் அதனைச் சிநேகிதத்திற்கு உவமை கூறலாம். எப்பொழுதும் ஒரே நிலையில் எப்பொழுதும் ஒரே நிலையில் பழகுபவரே பண்புடைய நண்பினர் ஆவர்.