பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



சொன்னால் புரிந்து கொள்ளத் தேவை இல்லை; உணர்த்தினாலேயே உணரும் உயர்வு உள்ளவரே உயர்ந்த நண்பர் ஆவர்; பன்னிப் பன்னிப் பலமுறை எடுத்துப் பகர்ந்தாலும் செவியில் சேர்க்காத முரடர்கள் அவர்கள் தொடர்பினை அறுத்துக் கொள்வதுதான் ஆக்கம் தரும்; துன்பத்தினின்று விடுதலை கிடைக்கும். உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். மெல்லிய உணர்வுகள் துல்லியமாக அறிபவரே நல்லியல் உடையவர் ஆவர்.

உன்னை நீதான் உயர்த்திக் கொள்ள வேண்டும்; யாரோ வந்து கைதுக்கி விடுவார்கள் என்று பைதுக்கிச் செல்ல வேண்டாம். தன்னை உயர்த்துபவனும் தான் தான்; தாழ்த்திக் கொள்பவனும் தானே தான். நிலையில் இருந்து படிப்படியாக வளர்பவனும் அவனேதான். எல்லாம் அவரவர் கைகளில்தான் இருக்கிறது; அழித்துக் கொள்ளலாம்; விழித்துக் கொள்ளலாம்; எப்படியும் வாழலாம்.

கப்பல் கரை சேர்கிறது என்றால் கலத்தின் மாலுமிக்குப் பாராட்டு; அவன் தன் கடமையில் கருத்துன்றினான் என்பது அதன் விருத்தம்; எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்கவும்; தெய்வம் கொடுத்த பொருளைக் கொண்டு இன்பம் துய்க்கவும்; மகிழ்ந்து உண்க. அதற்கு மேல் ஒருபடி, அதை நீபடி ஆன்றோர் சொற்படி தருமத்துக்குக் கீழ்ப்படி. இயன்றவரை தருமவினை கடைப்பிடி; இவையே வாழ்க்கைப் படிகள்: இம்மூன்றையும் விடாப்பிடியாகக் கொண்டு நடந்து கொள்க. வாதம் விடுக; தருமத்தில் பிடிவாதம் காட்டுக.