பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

119



26. படித்துக்கொண்டே இரு
(அறிவின்மை)

நுட்பமான அறிவு இல்லை என்றால் அவர் வறியவருக்கு நிகராவார்; ஒட்பமான அறிவு உடையவர் பெருஞ் செல்வருக்கு நிகராவர்; பேடிகள் பெண்மை அவாவுகின்றனர். பெண்களைப் போல் தம்மை அலங்கரித்துக் கொள்பவர். பயன்? அவர் பெண் ஆக முடியாது. அத போல ‘கலகல’ என்று தன்னை மிகைப்படுத்திக் கொள்பவர் கல்லாதவர், ‘பொல பொல’ என அறிவுடையவராகத் திகழ்வது அவர்களால் இயலாது.

இதனை நினைத்துப் பார்த்தாலே வியப்பாக உள்ளது; நூல் பல கற்றவர்; அவர் வீட்டு அடுப்பில் பூனை தூங்குகிறது. கேட்டால் “இனிமேல்தான் கடைக்குப் போக வேண்டும்” என்று கதைக்கிறாள் அந்தக் கற்றவர் மனைவி; “என்னய்யா நீ பல நூல் கற்று எல்லாம் தெரிந்தவராக இருக்கிறாய்; பஞ்சப் பாட்டுப் பாடுகிறாயே” என்று கேட்டால் அவர் தன் வீட்டில் மாட்டி வைத்திருக்கும் சரசுவதியின் படத்தைக் காட்டுகிறார். “இரண்டு படத்துக்கு இங்கு இடமில்லை” என்கிறார். “திருவேறு தெள்ளியராதல் வேறு, இந்த உலகத்தின் இயற்கை இது” என்று கூறுகிறார். “கலைமகள் இங்கு இருப்பு; மலர்மகள் உள்ளே வர மறுக்கிறாள்” என்று நகைத்துக் கொண்டே விடை தருகின்றார். கல்வியே பெருமை தருவது என்பது உணர்த்தப்படுகிறது.