பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

நாலடியார் செய்யுளும் செய்திகளும்




28. ஈயாத உலோபிகள்
(ஈயாமை)

நண்பனோ அந்நியனோ பசி அனைவருக்கும் உடைமை; அங்கே நட்பு பகை என்று பார்க்காதே; பசித்தவன் அவன் பசியைப் போக்குவதற்குப் பின் வாங்காதே; அவன் வாழ்த்தட்டும்; வையட்டும்; அஃது அவன்போக்கு. கதவு திறப்பது காற்று வருவதற்கு; பசித்தவர் தடையின்றி நுழைவதற்கு ஒரு சிலர் கதவு அடைத்துக் கொண்டு தாம் மட்டும் உண்டு மகிழ்வர்; அவர்கள் உள்ளம் மிகவும் குறுகியது. சுவர்க்கக் கதவுகள் அவர்களுக்குத் திறக்காது; ஒளி அவர்கள் வாழ்வில் காணமாட்டார்கள். அந்த வீடு இருண்ட வீடு என்றுதான் கூற முடியும்.

உதவுதல் என்பது உபரிப் பணம் உடையவரால் தான் முடியும் என்று கூறுதல் பொருந்தாது; கூலிக்கு வேலை செய்பவன்கூட ‘டீக் கடைக்குச் செல்கிறான்; அவன் தோழன் அவனோடு செல்லும்போது, “நீ நில்; நான் ‘டீ’ குடித்து விட்டு வருகிறேன்” என்று நிறுத்தி வைக்கமாட்டான். உடன் அழைத்துச் செல்வான்; இதுதான் பண்பாடு. பெரிய வீடு; கூர்க்கா காவல்; மேல்நாட்டு நாய். மனிதர்களுள் சாதி ஒழிந்தாலும் நாயினத்தில் ஒழியவில்லை. இவ்வளவும் மீறி உள்ளே செல்ல முடியுமா? சென்றால் இன்முகம் காட்டி நல் விருந்தா தரப்போகிறார்கள்? சலசலத்த புடவையுடன்,