பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

141


பெற்று அப்படி என்ன உனக்கு ஆடம்பர வாழ்க்கை கேட்கிறது? கேட்டால் என்ன சொல்கிறான். “காருக்கு பெட்ரோல் தேவை; டி.வி. இல்லாமல் பொழுது போகாது. பட்டுப்புடவை இல்லை என்றால் பத்துக் கல்யாணத்துக்குப் போக முடியாது. நகை இல்லை என்றால் புன்னகை எதிர் ஒலிக்காது” என்று பேசுகிறார்கள். சிக்கனமாக வாழ்க, சீராக வாழ்க, இந்த இன்பத் துணைகள் இல்லாமல் வாழ முடியும். இன்பம் சுமையாகக் கூடாது. சில சமயம் துன்பங்கள் சுகத்தைத் தரும். சில தேவைகளை மறுத்து வாழ்ந்தால் மகானுபவனாக வாழமுடியும். கவலை நீங்கும். பற்றுகளே பற்றர்க்குறைக்குக் காரணம் ஆகின்றன.

மானிடர் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கின்றனர். பிறப்பில் புதுமை இருக்கிறது. பழையன மறைகின்றன. புதியன தோன்றுகின்றன. மனிதன் புதியவன்; ஆனால் அவன் பண்பில் செயலில் எந்த வகையிலும் மாறாமல் இருக்கிறான். கஞ்சத்தனம் என்பது அவனோடு தோன்றுகிறது; மனித நேயம் அதனை அவன் மறந்துவிடுகிறான்; பிறர் துன்பம் கண்டு துடிக்கும் தாய்மை அவனிடம் அமைவது இல்லை. மனிதன் மனிதனாகவே இருக்கிறான். வானம் மாறிவிட்டது. ஆனால் மனிதன் மாறிப் பிறக்கக் கூடாதா? மேன்மைக் குணம் பெறக் கூடாதா? “மனிதன் இவன்” என்ற பாராட்டுக்கு உரியவன் பிறக்காமல் போகமாட்டான். ஒருவன் ‘தருக’ என்று கேட்க வருகிறான் என்றால் ‘பெறுக’ என்று தருவது இல்லை; அவன் மனம் கருகக் கடிந்து பேசிவிடுகிறார்கள்.

ஏன் வருகிறான்? எதனால் வருகிறான்? எப்படி வருகிறான்? எவ்வாறு வருகிறான்? சிந்தித்துப் பார்க்க