பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

149



நூல்பல கற்றவராக இருக்கலாம். நுண்ணறிவு படைத்தவராக இருக்கலாம். அவர்கள் நிறைகுடமாக இருக்க வேண்டும். வாதங்கள், பிரதிவாதங்கள் அவையின்கண் நடைபெறலாம். அவற்றிற்கு அஞ்சாமல் தக்க விடை தரும் தகவு அமைய வேண்டும்.

ஆசிரியத் தொழில் செய்வோர் மாணவர் தரமறிந்து நிலை அறிந்து அவர்கள் வினா அறிந்து விடை தரல் வேண்டும். 'சுட்டுப் போட்டாலும் படிப்பு வராது. குட்டிச் சுவராகப் போ” என்று சாபம் கொடுப்பவர் ஆசிரியர் ஆகார்.

கல்வித் தகுதி மட்டும் போதாது; பண்பாடு கூட்டல் தேவை. கல்வி மனப் பழக்கம்; பண்பாடு செயற்பழக்கம் அது சில சமயம் ‘குடி’ப் பழக்கத்தாலும் அமைவது. அதாவது பிறந்த குடியின் பின்னணி, சார்பு, வளர்ப்பு இவையும் கற்றவனை மதிக்கத்தக்கவனாக ஆக்குகிறது. எனவே கல்வியோடு பண்பும் கலந்தால் அவையின்கண் அவனை அனைவரும் பாராட்டுவர். கல்வி கற்றவர் என்று கருதுவர்.