பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


உலக நடை இது என்று அறிந்து செயல்படுபவர் அறிவு குறைந்தவராயினும் அவர் வெற்றி பெறுவார். அவரால் மற்றவர்களுக்கு இல்லை தொல்லை. விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சாதித்தால் அது சாதனை ஆகாது; மற்றவர்களுக்கு அது வேதனையாகும்.

“கல்லாதவரே மிகவும் நல்லவர். ஏன் எனில் அவர்கள் மிகையாகச் சொல்லாதவர்கள்” என்று கூறுவது வழக்கம். இவை எல்லாம் புகழ் மொழிகள் அல்ல; இகழ் மொழிகளே. அதற்கு மாறுபட்டு நாலடியார் நாலு வார்த்தைகள் பேசுகின்றன. கல்லாதவரை இவ்வாறு கூறி ஏசுகின்றன. கல் கல்லாதவரைவிட மேலானது. அது இருக்க கிடக்க, நடக்க, வீடுகட்ட எல்லாவற்றிற்கும் உதவுகிறது என்று கூறுகிறது. இதற்கு ‘மலைப்பிஞ்சு’ என்று அழகான சொல்லும் உள்ளது. கூட்டத்தைக் கலைக்க எதிரிகளைத் தாக்க இந்தப் பிஞ்சுகள் பயன்படுகின்றன. கல் சடப்பொருள், திடப்பொருள் அது ஒருவகையில் பயன்படுகிறது. அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய மனிதன் கல்லாதவனாகக் கிடந்தால் அவனுக்கும் கல்லுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அவன் மானிடனாகப் பிறந்தும் உயர்வு பெறத் தகுதியற்றவனாகிவிடுகிறான். அறிவு அற்ற நிலையில் அவன் கல்லைவிடத் தாழ்ந்தவன் ஆகின்றான்.

நாவிற்கு நரம்பு இல்லை என்றால் அது ஒரு வரம்புக்கு உட்படாது; தம்மினும் எளியவர் தம்மிடம் வேலைக்கு அமர்ந்தால் ‘இடு எடு’ என்று ‘கெடு பிடி’ காட்டுவது இன்று நடைமுறை. ‘ஆகாத பெண்டாட்டி