பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

163



35. தாழ்ச்சி நீக்குக
(கீழ்மை)

தட்டு ஒன்று தேடி அரிசியும் பொட்டும் வைத்து ஊட்டினாலும் கோழி குப்பையைத் தேடிச் சீக்கி அதைக் கிளறிப் புழுவும் பூச்சியும் தின் பதிலேயே நாட்டம் செலுத்தும், நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு புழைக் கடைக்குத்தான் போகும். பிச்சைக்காரி அவளை வீட்டுக்கு அழைத்துத் தட்டு நிறைய சோறு போட்டாலும் அவள் மாடத்தில் அங்கங்கே ஒர் உருண்டை வைத்துவிட்டு “அம்மா தாயே” என்று கேட்டு மறுபடியும் ஒன்று சேர்த்துத்தான் சாப்பிடுவாள். இப்படி ஒரு பழைய கதை. எவ்வளவு நல்ல நூல்களைத் தந்து ‘படி’ என்று கொடுத்தாலும் கீழ்மக்கள் அவற்றைப் புரட்டிப் பார்க்கமாட்டார்கள் குப்பைக் கூளங்களையே அற்ப காசுக்கு வாங்கி மனத்தை அழுக்காக்கிக் கொள்ளுவர்; மாதம் ஒரு நாவல் இவற்றையே விரும்புவர். கொலை, கொள்ளை விறுவிறுப்பாகப் படித்துச் சுறுசுறுப்பாகப் படிப்பதில் ஆர்வம் காட்டுவர். ‘ஆபாசம்’ அவர்களை இழுத்துப் பிடிக்கிறது. இஃது இன்று இளைஞர் மனம் கெடுவதற்குத் துணை செய்கின்றது. மட்டமான உணர்வுகளைத் துண்டும் காதற் கதைகளைப் படித்துக் காம உணர்வுக்குத் தீனி போடுவர். இன்று சிந்தனையைத் தூண்டும் எழுத்துத் தேவைப்படுகிறது; அந்தப் பக்கம் இவர்கள் திரும்புவது இல்லை.