பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



38. விலைக்கு எளியர்
(பொது மகளிர்)

விளக்கு எரிய நெய் தேவை; அணையாமல் இருக்க அவ்வப்பொழுது அது வார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். விலைக்கு உரிய மகளிர் அவர் உறவுக்கு அவ்வப்பொழுது பணம் தேவை. காசு அது இல்லை என்றால் அவள் கால் துசுக்கும் மதிக்கமாட்டாள். அவள் வேசி; அதைப் பற்றிப் பேசிப் பின் ஏசி எதுவும் பயன் இல்லை. அவள் நேசம்; அது காசு.

காசு இருந்தது; அவள் உறவுமாக அற்று விளங்கியது. உயிரினும் இனியன் தான் என்றாள். “மலை உச்சியா கவலை இல்லை. அதையும் நச்சி ஏறி வருவேன்” என்றாள். “செங்கோடு எனினும் அதனோடு உயர்வேன்” என்றாள். காசு அழிந்தது; தொட்டுப் பார்த்தாள்; அது ஒலிக்கவில்லை; “மலை உச்சி” என்கிறான். 'அய்யோ என் கால் வலிக்கும்” என்கிறாள். “நடக்க இயலவில்லை; முடக்கு வலி” என்கிறாள். அடக்கமான பதில். “அடிப்பாவி நீ உருப்படவேமாட்டாய்”.

“அங்கண் விசும்பில் தேவர்கள் தொழும் செங்கண்மால்” என்று வந்து செப்புகின்றனர். அவள் ஒப்புக் கொள்ளவில்லை. “யாராயிருந்தாலும் இங்கே நுழைவுச் சீட்டு நோட்டுக் கட்டு; அதைக் கேட்டுப் பின் வந்தவருக்கு வழி காட்டு” என்கிறாள்.