பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


சமவிலைக்குப் பேசி வாங்கிக் கொண்டு வந்து விட்டதாக ஒருவன் பெருமை பேசினால் இவன் வியாபாரம் செய்யத் தக்கவன் என்று யார் மதிப்பார்கள்?”

“கொள் சிவப்பாக இருக்கிறதே என்று அதனையும் கொள்முதல் செய்துவிட்டேன்” என்கிறான். பரத்தையையும், சிரத்தையையும் ஒன்றாக மதிக்கிறார் உம் தலைவர். சிரத்தையோடு வாழ்க்கை நடத்தும் எனக்குத் தரும் மதிப்பையே அவளுக்கும் தருகிறார். இவர் புத்தி அந்த வியாபாரியின் புத்தி என்றுதான் கூற முடியும். நிறம் இவரை மயக்கி விட்டது. கறுப்புக்கொள் விருப்பத்திற்கு உரியது. சிகப்புக் கொள் தூர ஏறிய வேண்டியது. இந்தப் பேதம்கூட அறியாத வேதம் உம் தலைவரது. இந்த நாதம் நம்மிடம் இசையாது; அசையாது என் மனம்.

“பாணனே நீ வீணன்தான்; அளக்கின்றாய்; வளமான வார்த்தைகள் கொண்டு, ‘அவள் காட்சிக்கு இனியள், யான் மாட்சிக்கு உரியள்’ என்றெல்லாம் பேச்சுக்குச் சொல்கிறாய். உடுக்கை அதற்கு இரு கை; இடக்கை, வலக்கை; வலக்கைதான் ஓசை பெறுகிறது. தட்டுவது அங்கே முட்டுவது இங்கே, உறவாடுவது அங்கே. ஒட்டுவது இங்கே. பாணனே! தேவாரம் பாடி மகிழ்வது அங்கே. வீட்டுத் தாழ்வாரம் தேடுகிறார் இங்கே. நிறுத்து உன் ஆரவாரம்; சென்று வருகிறார் அங்கு வாரா வாரம்; அதை மறுத்துப் பலனில்லை. நிறுத்து உன் துது; இதை அவரிடம் ஒது.

“வளம் மிக்க வயல்களை உடைய ஊரன் அவன் என் தலைவன். ஈ வந்து அவனைத் தொட்டாலும் உடனே அதை ஓட்டி விட்டு மறு வேலை பார்ப்பேன். இன்று தீ பறப்பது போல் வெம்முலையால் அவள்