பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை;-ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின், நாளைத்
தமீஇம் தழிஇம் தண்ணம் படும். 6

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துதும் நாளுண்ணும்; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில். 7

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் எல்லில்
கருங்கொண்மு வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும். 8

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான் என் றெண்ணப் படும். 9

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅது நல்லறமும் செய்யார்-கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர்; வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி. 10

2. இளமை நிலையாமை

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார். 11