பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ.

199



துன்பமே மீதுாரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார்-இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல். 60

7. சினமின்மை


மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க-மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று. 61

தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ-மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர். 62

காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஒவாதே தன்னைச் சுடுதலால்-ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. 63

நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர்-ஓர்த்ததனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்துண் முட்டுமாம் கீழ். 64

இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் -எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை 65