பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

203



காணின் குடிப்பழியாம், கையுறின் கால்குறையும்
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; நீள்நிரயத்
துன்பம் பயக்குமால், துச்சாரி நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு. 84

செம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ உம்மை
வலியாற் பிறர்மணைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார். 85

பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க-மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு. 86

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து. 87

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓ!ஒ! கொடிதே;
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாது.உள் ஆறி விடும். 88

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்;-வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும். 89