பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



வடுவிலா வையத்து மன்னிய முன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர். 114

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறுஉம்
கல்லாரே யாயினும் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லிரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல். 115

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங்கண்ணாய்!
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய். 114

தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க;
என்னை அவரொடு பட்டது?-புன்னை
விறற்பூங் கமழ்கானல் வங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும். 117

ஆவே றுருவின வாயினும், ஆபயந்த
பால்வே றுருவின வல்லவாம்;-பால்போல்
ஒருதன்மைத் தாகும் அறநெறி, ஆபோல்
உருவு பலகொளல் ஈங்கு. 118

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்?-யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்? 119