பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது. 184

உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல-செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றி
செய்வர் செயற்பா லவை. 185

பெருவரை நாட! பெரியோர்கண் தீமை
கருநரைமேற் சூடேபோற் றோன்றும்;-கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும். 186

இசைந்த சிறுமை யியல்பிலா தார்கட்
பசைந்த துணையும் பரிவாம்-அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும். 187

மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)
ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே, நலவருள்
நன்மை வரம்பாய் விடல். 188

கடுக்கி யொருவன் கடுஞ்குறளை பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தார்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று. 189