பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும்
பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
மரீஇஇப் பின்னைப் பிரிவு. 220

23. நட்பிற் பிழை பொறுத்தல்


நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கு உண்டு 221

செறுத்தோறுடைப்பினுஞ் செம்புனலோ டுடார்,
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு 222

இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ;-நிறக்கோங்கு
உருவவண் டார்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறையிருவர் நட்பு 223

மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங்
கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப!
விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ்
சுடுதற்கு முட்டிய தீ 224

இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப்
பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் பொன்னோடு
நல்லிற் சிதைத்ததி நாடொறும் நாடித்தம்
இல்லத்தில் ஆக்குத லால் 225