பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம்-மாரி
வறந்தக்காற் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்காற் சீரிலார் நட்பு 232

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால்-நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று 233

பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும்-அருகெல்லாம்
சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட!
பந்தமி லாளர் தொடர்பு 234

செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும்-மெய்யாக
இன்புறுஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
துன்புறுஉம் பெற்றி தரும். 235

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறுபடும் 236

முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு 237