230
நாலடியார் செய்யுளும் செய்திகளும்
வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புட்ையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது 244
கடல் சார்ந்தும் இன்னிர் பிறக்கும் மலைசார்ந்தும்
உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம்
இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப
மனத்தனையர் மக்களென் பார் 245
பரா அரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல
மரு உச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார்
விராஅஅய்ச் செய்யாமை நன்று 246
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புனரிற் புணருமாம் இன்பம்;-புணரின்;
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியும் நோய் 247
நன்னிலைக்கண் தன்னை நிறப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான் 248
கரும வரிசையாற் கல்லாதார் பின்னும்
பெருமை யுடையாருஞ் சேறல்-அருமரபின்
ஒதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப!
பேதைமை யன்ற தறிவு 249