பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



பாடமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
முடர் முனிதக்க சொல்லுங்கால்-கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து 316

பெறுவது கொள்பவர் தோள்போல் நெறிப்பட்டுக்
கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; மற்றும்
முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
அறிதற் கரிய பொருள் 317

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருடெரியார்
உய்த்தக மெல்லா நிறைப்பினும்-மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே, பொருடெரிந்து
தேற்றும் புலவரும் வேறு 318

பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள்-பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட்!
உரையாமோ நூலிற்கு நன்கு? 319

இற்பிறப் பில்லா ரெனைத்துநூல் கற்பினும்
சொற்பிறரைக் காக்குங் கருவியரோ?-இற்பிறந்த
நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
புல்லறிவு தாமறிவ தில். 320

33. புல்லறிவாண்மை


அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
பொருளாகக் கொள்வர் புலவர்;-பொருளல்லா
ஏழை அதனை இகழந்துரைக்கும் பாற்கூழை
முழை சுவையுணரா தாங்கு 321