பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப்
பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
பொன்னும் புளிவிளங்கா யாம் 328

வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
மறுமை மனத்தாரே யாகி;-மறுமையை
ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
சிந்தியார் சிற்றறிவி னார் 329

என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை;-அன்னோ
அளவிறந்த காதல்தம் ஆருயி ரன்னார்க்
கொளஇழைக்கும் கூற்றமுங் கண்டு 330

34. பேதமை


கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
நிலையறியா தந்நீர் படிந்தாடி யற்றே,
கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
வலையகத்து செம்மாப்பார் மாண்பு 331

பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
ஒசை அவிந்தபின் ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை நீக்கி அறவினை
மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு 332

குலந்தவங் கல்வி குடிமைமுப் பைந்தும்
விலங்காமல் எய்தியக் கண்ணும்-நலஞ்சான்ற
மையறுதொல்சீர் உலகம் அறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றின் நேர் 333