பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

நாலடியார் செய்யுளும் செய்திகளும்



கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று-துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை 388

சாய்பறிக்க நீர்திகழுந் தண்வய லூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்;தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான் 389

அரும்பவிழ் தாரினான் எம் அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண, கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை 390


காமத்துப் பால்
40 காமநுதலியல்


முயங்காக்காற் பாயும் பசலைமற் றுடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; வயந்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு 391


தம்மவர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க்-கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து 392