பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீ.

255



கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மார்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று 393

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்ட நீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன்-மெல்விரலின்
நாள் வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து 394

கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்-பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து 395

அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ;-அரக்கார்ந்த
பஞ்சிகொண் டுட்டினும் பையெனப் பையெனவென்(று)
அஞ்சிப்பின் வாங்கும் அடி 396

ஒலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேற்
கோலுஞ்செய் சாந்தந் திமிர்ந்து 397

கடக்கருங் கானத்துக் காளையின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி; சுடர்த்தொடீஇ!
பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதுறும் ஆறு 398