பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா.சீ

65


சொற்களில் அவர்கள் நடிப்பு வெளிப்பட்டு விடும். தீயவர் நட்பைத் தீவினை என்று அஞ்சுக; அவர்களை விட்டு விலகுக.

கத்தி கையில் இருந்தால் அது தற்காப்புக்கு உதவும் என்று கருதுகிறாய்; தீயவர் தொடர்பு சமயத்துக்கு நன்மை என்று கருதலாம்; அடியாட்களை வைத்துக் கொண்டு கடினமான செயல்களைச் சாதிக்கலாம் என்று கணக்குப் போடலாம்; மடியில் கனம் இருந்தால் வழியில் தனம் பறி போகும். உன் கைவசம் உள்ள கத்தியே பகைவர் கைக்குக் கூர்வாள் ஆகிவிடும். அதை வைத்து உன்னைக் குத்த வாய்ப்பை நீயே ஏற்படுத்தித் தருகிறாய். அற்பர்கள் உறவு கைக் கத்தி போன்றது. அவர்களை விட்டு விலகு, உனக்கு அபாயம் நேராது.

என்னப்பா இளைத்திருக்கிறாய்? என்றால் அவன் என்ன சொல்கிறான். சுமக்க முடியாத குடும்பச் சுமை; மனைவி மக்கள் மேல் பாசம்; அவள் கேட்ட வரம் தந்து ஆக வேண்டும். மகன் கண்ணில் பட்ட பொருள் வாங்கித் தர வேண்டும். அவர்கள் வசதிக்கு இவன் வணக்கம் செலுத்துகிறான். விட்டு விடுதலையாகி உயிர்க்கு ஆக்கம் தேடுக; பற்றுகள் நீங்குக, அளவுக்கு மீறிய பாசம் உன் உயிர்க்கு நாசம்; பாசம் என்றாலே கயிறு: அஃது எப்படியும் செல்லாமல் இழுத்துப் பிடிக்கும். உன் கழுத்துக்குச் சுருக்கு அதனால் அதை முற்றிலும் விலக்கு, பாசமுள்ள மாந்தர்கள் மிகுதி, அவையும் உனக்குக் கெடுதி, இதுவும் தீவினை என்று அஞ்சுக.