பக்கம்:நாலடியார்-செய்யுளும் செய்திகளும்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

நாலடியார் செய்யுளும் செய்திகளும்


ஆகும். பெருமை மிக்க நிலையில் உள்ளவர் சீற்றம் கொண்டால் அதை நீ ஆற்ற முடியாது; போற்றும் காவல் உள்ள இடத்தில் பொதிந்து மறைந்து கொண்டாலும் அவர்கள் காற்றும் புகாத இடத்தில் ஆதிக்கம் செலுத்தி உன்னை அடக்கிவிடுவர். பெரியோரை அவமதிக்காதே.

முளைத்து இலை மூன்று விடவில்லை; அதற்குள் களைத்த சொற்களைக் கொண்டு வளைத்துப் பெரியோர்களைத் தாக்குகிறாய். அறிவில் ஆற்றலில் நம்மைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறாய்! அவசரப்படுகிறாய்; ஆவேசமும் கொள்கிறாய். அறம் அறியும் அறிஞர்கள் அவர்கள் தன்னடக்கம் உடையவர்கள். தம்மைத்தான் புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கமாட்டார்கள். ஆறி அடங்கி இருப்பர். அவர்களை மதித்து அவர்கள் தகுதி அறிந்து போற்றுவது சிறந்த கோட்பாடு ஆகும்.

சிறியவர் நட்புத் தொடக்கத்தில் சீறி எழும்; காலையில் தோன்றும் நிழல் பெரிதாகக் காணப்படும். வர வர மாமியாராகி விடும்; தேய்ந்துவிடும். பெரியவர் நட்புத் தொடக்கத்தில் சிறிதாகக் காணப்படும். வரவரப் பெருகும்; மாலை நிழல் போல் அது நீண்டு கொண்டே இருக்கும். அது குளிர்ச்சியும் தரும்; மகிழ்ச்சியும் தரும். சிறியோர் தொடர்பைக் குறைத்துக் கொள்; பெரியோர் மதிப்பைத் தேடிக் கொள்.

அரசர் தம் செல்வம் அவர்களை அணுகுபவரே அடைவர்; அனுபவிப்பர்; எல்லாச் சலுகைகளையும் பெறுவர்; பெண் கூட அவளை அணுகினால்தான் அவள் இன்பம் தருவாள், எதற்கும் கொடுத்து வைத்திருக்க