பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

திர உணவகம்தான்; அலுத்துவிடுகிறது. இதுவல்ல நட்பு: இது வெறும் நடிப்பு.

நாய்க்கால் சிறுவிரல்களை எப்பொழுதாவது கவனித்தது உண்டா? அவை சேர்ந்தே இருக்கும். பிரிக்கவே முடியாது. அழகான உவமை. அதுபோல் சேர்ந்தே இருப்பர்; அவர் நட்பர். ஆனால் ஈய்க்கால் அளவு உதவ வாய்க்கால் அங்கே சிறிதும் ஏற்படாது. பேய்க்கால் அவர்கள் உறவு; நிலைத்து ஊன்றி நிற்காது. சேய்க்கால் சென்று கொண்டு வர வேண்டும் வாய்க்கால் நீர்; அது வயல் விளைக்கும் செந்நெல்; வாழ்வு அளிக்கும். அத்தகையவர் உயர் நட்பினர் ஆவர்.

நல்லது நான்கு நவின்றால் நீ செவி கொடுத்துக் கேட்பாயா? கேள். தெளிவில்லாத முரடர் அவர் நட்பைவிட அவர்கள் பால்கொள்ளும் பகைமை தகைமை; நோய்வாய்ப் பட்டு நொந்து நித்தம் நித்தம் சத்தம் இட்டுக் கொண்டிருப்பதைவிட மொத்தமாக உயிர்விடுவது உயர்வு ஆகும். பண்பட்ட நண்பரைப் புண்பட்ட சொற்களில் தாக்குவதைவிடக் கண்பட்ட வாள்கொண்டுதென்பட்ட அவைரக் அடித்துக் கொன்றுவிடு; அது நன்று என்று நானிலம் பேசும். இல்லாததைச் சொல்லி நல்லார் இவர் என்று நற்சொல் கூறிப் புகழ்வதைவிட வசைச் சொற்கள் நான்கு பேசிக் கற்கள் வீசுவதைப்போல் கடிந்து உரைப்பது கவின் மிக்க செயலாகும்.

நட்பைத் தேடும்போது நாள் பல ஆயினும் நயத்தக்க வரை நாடி நட்பாகக் கொள்க. அக்கா மகள் என்று அங்க
7