பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஈனம் உடையவளை நீ செங்கை பிடித்து மணந்து கொண்டால் அவள் உனக்கு எப்படி இன்பம், நன்மை, பணி முழுவதும் செய்வாள்? தங்கமனம் படைத்த செம்மல்களைச் செறிவு கொள்க.

23. ஒருவர் பொறை இருவர் நட்பு

(நட்பிற் பிழை பொறுத்தல்)

உமி உண்டு என்பதால் நெல்லை நெகிழ்ப்பார் இல்லை; நுரை உண்டு என்பதற்காக நீரைக் குறை கூறி ஒதுக்கமாட்டார்கள். புல்விதழ் அதன் புறத்தைச் சுற்றிக் கொண்டு அதன் நிறத்தைக் கெடுக்கிறது என்பதால் நறுமலரை வீசி எறியமாட்டார்கள்; அவைபோல நண்பனின் பழமை பாராட்டி அவன் கிழமையில் எந்தக் குறையும் காணாதே.

கரையை உடைத்துக் கொண்டு நீர் வயலில் பாய்கிறது; கரை உடைந்து விட்டது என்பதால் அதன் மீது சினம் கொண்டு அக்கறை காட்டாமல் பாய்ந்து ஓடவிட்டால் நெல்லை அஃது அழிக்கும். வயலுக்கு நீர் தருவார் யார்? நீரோடு நீர் ஊடல் கொண்டால் பயிர் வாடல்தான் மிச்சம். அதனால் பழகிவிட்ட நண்பர் உரிமை பற்றித் தவறுகள் மிகையாகச் செய்துவிட்டாலும் பகையாகக் கொள்ளாது நகையாகக் கொள்வதுதான் தகையாகும்.

சரிதான்; அளவுக்கு மீறித் தவறு செய்துவிட் டான். யார் அவன்? உன் நண்பன்; பலகாலம் பழகியவன்; அந்தப் பழமையைப் பார்க்க வேண்டாமா? உடனே நீ சீறிச் சினந்தால் அவன் உன்னை விட்டுத் தொலைந்தான்