பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

இல்லை. இதோ தேனீ போலச் சுறுசுறுப்பாக வேலை செய்கிறானே அவன் நிலை என்ன? ‘ஒய்வு இல்லை; ஒழிச்சல் இல்லை’ என்கிறான். பொருள் ஈட்டுவதும் துன்பம்! ஈட்டியதைக் காத்து வைப்பதும் துன்பம். பணக்காரனாகப் பிறப்பது பாபமான தொழில் அரசர் குடியில் பிறந்தால் பெருஞ்சுமை என்கிறான் சேரன் செங்குட்டுவன். “மழை வளம் கரந்தால் வான்பேர் அச்சம்; நாட்டு மக்கள் தவறு செய்தால் அதைவிட அச்சம்” என்கிறான். பொருளதிகாரமே பொறுப்புடைய ஒன்று; அளவாக ஈட்டி அதைச் சேர்த்து வைத்து வளமாக வாழ்வதே அறிவுடைமை; முடிந்தால் பிறர் துன்பத்தையும் போக்குக. இதுவே அறன் எனப்படுவது ஆகும்.

29. இல்லானை இல்லாளும் வேண்டாள்

(இன்மை)

காவி உடை உடுத்தி இந்தப் பாவ உலகினின்று விடுதலை பெற்றவன் ஆயினும் அவனும் நாலு காசு வைத்திருந்தால்தான் நாலுபேர் சுற்றி வருவார்கள். சாதிக்காரர்தான் எதையும் சாதித்து விடலாம் என்று நினைக்கலாம்; என்றாலும் குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே என்பதை மறந்துவிட முடியாது.

நீர் அதைவிட நெய் நுண்மையது; அதைவிடப் புகை நுழைய முடியாத இடமே இல்லை என்பர். அந்தப் புகையும் நுழைய முடியாத இடத்தில் வாழ வகை அறியாத வறிஞன் நுழைந்து விடுவான்; அவர்கள் பிழைக்க வழி தேடி எங்கும் வட்டமிடுவர். காரணம்? இல்லாத கொடுமைதான்.