பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


தாய்மை அவனிடம் அமைவது இல்லை. மனிதன் மனிதனாகவே இருக்கிறான். வானம் மாறிவிட்டது. ஆனால் மனிதன் மாறிப் பிறக்கக் கூடாதா? மேன்மைக் குணம் பெறக்கூடாதா? "மனிதன் இவன்" என்ற பாராட்டுக்கு உரியவன் பிறக்காமல் போகமாட்டான். ஒருவன் தருக என்று கேட்க வருகிறான் என்றால் 'பெறுக’ என்று தருவது இல்லை; அவன் மனம் கருகக் கடிந்து பேசிவிடுகிறார்கள்.

ஏன் வருகிறான்? எதனால் வருகிறான்? எப்படி வருகிறான்? எவ்வாறு வருகிறான் சிந்தித்துப் பார்க்க வேண்டியது. அதைச் சிந்தித்துப் பார்க்கச் சீர்மை இல்லை. இது ஒரு விஞ்ஞான உண்மை; சில உந்துதல்கள் காரணம் ஆகின்றன. 'இல்லாமை' அவனை வந்து நெருக்குகிறது. என் செய்வான்? படித்தவன்தான் பண்பாளன்தான் , அறிந்தவன்தான். வேறுவழி இல்லை தாழ்ந்து விடுகிறான். கூனிக்குறுகி அவன் உன் முன்வந்து நிற்கிறான். ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும் அவன் மனம் இடித்து உரைக்காமல் இல்லை. இதை உணராமல், 'இல்லை' என்று ஒரே சொல்லில் அவனை அனுப்ப நினைக்கிறார்கள்! என் செய்வான்? அவன் எப்படி வாழ்வான்? உயிர் அதனைப் போக்கும் சுருக்குக் கயிறு; அந்த மறுப்புச்சொல் பொறுப்பற்ற செயல்; கொலைஞர்கள் இவர்கள்.

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா? ஒருவன் முந்திக் கொண்டான். தங்க நாணயங்கள் சேர்த்துக் குவித்துக் கொண்டான். அடுத்த வீட்டுக் அவன் பிந்திச் சென்றான். கால் கை பிடிபட்டு உதைபட்டான். அவரவர் அதிருஷ்டம் அது. வாய்ப்புக்கள் சிலரை வாழவைக்கின்றன. சிலரைத் தாழ்த்துகின்றன. ஏழையும் வாழ்கிறான். செல்வனும் வாழ்கிறான். ஏறக்-