பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மதிப்பீடுகளை அவன் உதைத்துத் தள்ளலாம்; அதற்காக நாம் நம் மனப் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பது இல்லைஎன்பர். அப்பொழுதும் மேன்மக்கள் எதிரிகளுக்கும் தம்மாலான நன்மைகளைச் செய்துகொண்டே தான் இருப்பர்.

மேன்மக்கள் என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் என்ன தகுதிகள் இருக்கின்றன? அவர்களிடம் எதிர்பார்க்கும் நற்பண்புகளை நவில இயலுமா? 'களவு' என்பது அவர்களிடம் காணமுடியாது; மறைவாகப் பிறர் பொருளைக் கவ்வுதல் என்ற நினைவு தோன்றாது. அகப்பட்டவரையில் சுருட்டிக் கொள்வது என்ற ஆக்கிரமிப்பு அவர்களிடம் இருக்காது. 'குடி' அந்தப் பேச்சே அங்கே பேசக்கூடாது; கீழ் மக்கள் தாழ் மதுக்களைப் பருகி மகிழ்வர்; உயர் மட்டம் அவர்களுள்ளும் குடிப்பார் உளர்;கொஞ்சம்பணம் கைக்குவந்துவிட்டாலே பான வகைகள் வந்து சேர்ந்து விடுகின்றன. 'வசதி இருக்கிறது குடிக்கிறேன்; அதனால் என்ன தவறு' என்று வினவுவர். கொலு பொம்மைபோல் நிற்பது வாழ்க்கை அன்றும் வாழ்க்கை அனுபவிப்பதற்கு என்றுசித்தாந்தம் பேசுவர். வெளிநாட்டுச் சரக்கு அவற்றை அவர்கள் உள்ளே இறக்குமதி செய்து பெருமைப்படுத்துகிறார்கள். இவர்கள் பணக்காரர்கள் ஆவர். பண்பாளர் அன்று; மேன்மக்கள் எந்த வகை மயக்கம் தரும் குடி வகைகளையும் தொடமாட்டார்கள். புகைபிடிப்பதையும், வரைவு இல்லாமல் மகளிரை நாடுதல் முதலிய தீய பழக்கங்கள் அவர்களிடம் காண முடியாது பிறரை மணமறிந்து எள்ளிப் பேசமாட்டார்! இகழ்ந்து உரைத்தலால் புகழ் அமையாது என்பதை நன்கு அறிவர். எந்த நிலையிலும் வாய் பொய் பேசாது, வாய் என்றாலே வாய்மை என்பதை உணர்ந்தவர். வாய் என்ற