பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ரோஷம் பொத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான். "என் மனைவியை நீ ஏன் முறைத்துப் பார்த்தாய்?" என்று கேட்பான், "அழகாக இருக்கிறாள்; அதனால் அவள் என்னைக் கவர்ந்தாள்" என்றால் அவன் கேட்பானா? பக்கத்து வீட்டுக்காரி எப்படி இருந்தால் உனக்கு என்ன? குருடாக இருந்துவிடு; பிரச்சனையே வராது; உன் வீட்டுக்காரியும் சும்மா இருக்க மாட்டாள். 'என்னைவிட அவள் எந்த வகையில் அழகு?' என்று வினாத் தொடுப்பாள். இதற்கொல்லாம் விடை தேடிக் கொண்டிருக்க முடியாது, மற்றொன்று புறங்கூறிப் பொய்த்து நகை செய்யாதே. நண்பன் இருக்கும்போது நகைபடப் பேசிவிட்டு அவன் சற்று மறைந்ததும் அவன் குறைகளை மிகைபடப் பேசுவது இழிவு ஆகும். அதைவிட நாக்கைப்பிடுங்கிக்கொண்டு யாக்கையை விட்டு விடலாம். வாழவே தேவை இல்லை. புறங்கூறுவது கெட்ட பழக்கம். அதனால் அந்த வகையில் ஊமையாகச் செயல்படுக; மற்றவர்கள் வாயைக் கிளறுவார்கள்; நீ ஏதாவது உளறுவாய். ஐம்புலன்களை இறைவன் அளித்தாலும் சிலவற்றைச் செயல்படாமல் வைத்துக் கொள்வது நல்லது செவி, நாக்கு, வாய் இந்த மூன்று ஒலிக் கருவிகள்; இவற்றைக் கட்டுப்படுத்து; இரைச்சல் செய்யாமல் பார்த்துக்கொள். இனிமையான பண்ணிசை கூட்டு இந்த இழி இசை தள்ளிவிடு; இதுவே உயர்வதற்கு வழியாகும்.

சிலபேரைச் சில நேரம் மட்டும் பார்த்தால் போதும்; அடிக்கடி வந்தால் அவன் ஏதோ உதவிக்கு வருகிறான் என்று இகழ்ந்து பார்ப்பான். மேலோர் எத்தனை முறை சென்றாலும் முகம் இனிக்க வைத்து அகம் நகைக்க வைத்து உறவாடுவர். அவர்களைப் பார்த்து அணுகுதல் செய்க: மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம் என்பது தொல் மொழி; அதை மதித்து நடந்து கொள்க.