காமம் 162 இன்பவியல் 39. கற்புடை மகளிர் அரும்பெறற் கற்பின் அயிராணி அன்ன பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும்-விரும்பிப் பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும் கறுநுதலாள் நன்மைத் துணை. 381 குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும் கடல்நீர் அறவுண் ணும் கேளிர் வரினும் கடனீர் மை கையாருக் கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சியாள். 382 காலாறும் ஆருய் கனிசிறிதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும்-மேலாய வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல். 383 கட்கினியாள், காதலன் காதல் வகைபுனே வாள், உட்குடையாள் ஊர்நாண் இயல்பிள்ை.-உட்கி, இடனறிந் தூடி, இனிதின் உணரும் மடமொழி மாதராள் பெண். 384 எஞ்ஞான்றும் எங்கணவர் எம்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நானுதுமால்; - எஞ்ஞான்றும் என்ன்ே கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால் பன்மார்பு சேர்ந்தொழுகு வார்! 385
பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/168
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை