பக்கம்:நாலு பழங்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பசித்த முனிவர்

15

அதைக் கேட்ட முனிவர் அவனைப் பக்கத்தில் வரச் செய்து சுவாமியின் திருநாமத்தைச் சொல்லித் தம்மிடம் இருந்த விபூதியை எடுத்து அவன் வயிற்றின் மேல் தடவினார். என்ன ஆச்சரியம்! அவன் வயிற்று வலி நின்று விட்டது.

வேடன் மறுபடியும் விழுந்து முனிவரை வணங்கினான்.

முனிவர் அவனுக்கு ஆசி கூறி அனுப்பினார்.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/21&oldid=1084210" இலிருந்து மீள்விக்கப்பட்டது