அரச குமாரன் சோதனை
49
"என் முதல் தெய்வத்துக்கு."
"உன் தகப்பனாருக்கா?"
"ஆம்."
"அவர் என்ன செய்கிறார்?"
"ஒன்றை இரண்டாக்குகிறார்!"
"மண் கட்டியை உடைத்து உழுகிறாரோ?"
"ஆம்"
"எந்த இடத்தில் உழுகிறார்?"
"போனால் வராத புன்செய்க்கு அடுத்த நன் செய்யிலே."
"ஓகோ! சுடுகாட்டுக்கு அடுத்த நிலத்திலா?"
"ஆம், ஐயா!" என்று மரியாதையுடன் விடையளித்தாள் அவள். கொஞ்சம் கஞ்சி சாப்பிடுகிறீர்களா?" என்றும் கேட்டாள்.
"சரி" என்று ஒப்புக்கொண்டான் ராஜகுமாரன்.
கஞ்சிச் சட்டியின் மேல் மூடியிருந்த கலயத்தை அவள் எடுத்தாள். அதில் அப்படியே கஞ்சியை ஊற்றுகிறாளா என்று கவனித்தான் ராஜகுமாரன். அதை முதலில் கழுவி விட்டுப் பிறகு அதில் கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள். ராஜகுமாரனுக்குச் சந்தோஷம் உண்டாகி விட்டது. 'இந்தப் பெண் நமக்கு மனைவியாக வாய்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்' என்ற ஆசை அவனுக்கு அப்போது உண்டாயிற்று.
"உன் வீடு எங்கே இருக்கிறது?" என்று கேட்டான்.