120. நாவுக்கரசர்
மேனி தன்னை (4.41) என்ற முதற் குறிப்புடைய திரு நேரிசைப் பதிகத்தின்,
கட்டராய் கின்று நீங்கள்
காலத்தைக் கழிக்க வேண்டா எட்டவாங் கைகள் வீசி
எல்லிகின் றாடு வானை அட்டமா மலர்கள் கொண்டே
ஆனஞ்சும் ஆட்ட ஆடி சிட்டராய் அருள்கள் செய்வார்
திருச்சோற்றுத் துறைய னாரே, (2)
என்பது இரண்டாவது திருப்பாடல். திருவிருத்தத்தாலான இன்னொரு பதிகமும் இத்தலம் பற்றியதே. காலை எழுந்து’ (4.85) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகத் தின்,
அளக்கு நெறியினன் அன்பர்கள் தம்மனத்
தாய்ந்து கொள்வான் விளக்கும் அடியவர் மேல்வினை
தீர்த்திடும் விண்ணவர்கோன் துளக்கும் குழையணி சோற்றுத் துறையுறை வார்சடைமேல் திளைக்கு மதிய மன்றோ
எம்பிரானுக் கழகியதே. (3)
என்பது மூன்றாவது திருவிருத்தம்.
கொல்லையேற்றினர்’ (5.33) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தில்,
ஆணி போலநீ ஆற்ற வலியைகாண் ஏணி போல்இழிங் தேறியும் ஏங்கியும் தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே.(1)