இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (3) 148
இங்ஙனம் இத்தலங்களை வழிபட்டுத் திருநாவுக்கரசர் திருப்புகலூருக்கு மீள்கின்றார். ஆளுடைய பிள்ளையாரும் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டுத் தன் கெழுதகை நண்பர் நாவுக்கரசரை நினைந்த வண்ணம் திருப் புகலூர்க்குத் திரும்புகின்றார். அப்பர் பெருமான் பிள்ளை யாரை எதிர்கொண்டு அழைத்து வந்து முருக நாயனார் திருமடத்தில் அவருடன் அளவளாவி அமர்கின்றார். அப் பொழுது சிறுத்தொண்ட்ர், நீல நக்கர் ஆகிய அடியார்கள் அங்குப் போந்து இந்த இரு பெருமக்களை வணங்கி மகிழ் கின்றனர்.
31. இவர்கள் இருவரும் அறுபத்து மூவர்களைச் சேர்ந்த-அடியார்கள்.