பக்கம்:நாவுக்கரசர்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு 179

கோயிற் கதவினைத் தாம் அரிதில் திறக்கப் பாடியதும், ஞானசம்பந்தர் விரைவில் அடைக்கப் பாடியதும் ஆகிய அருமை எளிமை இவற்றைநோக்கி இறைவன் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன்’ என்று அஞ்சிக் கவலை கொண்டு திருமடத்தின் ஒருபால் உறங்கும்பொழுது இறைவன் அவரது கனவில் தோன்றித் தன்னை வாய்மூர்த் தலைவன் எனக் கூறி வாய்மூர்க்கு அழைத்துச் சென்றனர் என்பதும்,

மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார் அதென்கொலோ? (2)

என்று அப்பொழுது அப்பர் பெருமான் பாடிய திருப்பாட லால் இனிது புலனாகும். இவ்வாறு கனவிடைத் தோன்றிய இறைவனைக் கண்டு நீர் யார்?’ என வினவ, அவர் நீ கொண்ட அச்சத்தைத் தவிர்வாயாக; உன்னை அழைக்க வந்தேன்’ என்று மறுமொழி பகர்ந்தனர் என்பது,

தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆரென்றேன் அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் (3)

என்ற தொடரால் அடிகள் குறிப்பிட்டுள்ளார். தம்மை அழைத்துச் செல்லும் வாய்மூர்ப் பெருமாளை மிகவும் அருகில் தம் கண்ணெதிரே காணப்பெற்றும் தாம் அவரைப் பின் தொடர்ந்து சென்றபொழுது அவர் இடைவழியில் மறைந்தருளத் தாம் அவரைக் காணாது கலக்கமுற்ற நிலையை,

கழியக் கண்டிலேன் கண்ணெதிரே கண்டேன் ஒழியப் போந்திலேன் ஒக்கவே ஓட்டங்தேன் வழியிற் கண்டிலேன் வாய்மூ ரடிகள்தம் சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தென்கொலோ? (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/222&oldid=634222" இலிருந்து மீள்விக்கப்பட்டது