தொண்டை நாட்டுத் திருத்தல வழிபாடு 227
‘வெள்ளத்தைச் சடையில்” (4.45) என்று தொடங்கும் பதி கத்தில்,
ஒருத்திதன் தலைச்சென் றாளைக்
கரந்திட்டான் உலகம் ஏத்த ஒருத்திக்கு நல்ல னாகி
மறுப்படுத் தொளித்து மீண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தான்
உணர்வினால் ஐயம் உண்ணி ஒருத்திக்கு நல்லன் அல்லன்
ஒற்றியூ ருடைய கோவே. (6) என்பது ஆறாவது பாடல். ஓம்பினேன் கூட்டை’ (4.46) என்ற பதிகத்தில் இரண்டு பாடல்கள்தாம் கிடைத்துள்ளன.
மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை யூன்றிச் சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது மதனெனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய வொண்ணா துணையுனும் உணர்வை நல்காய்
ஒற்றியூ ருடைய கோவே. (2) என்பது இதன் இரண்டாவது பாடல்.
செற்றுக் களிற்றுரி’ (4.86) என்ற செந்தமிழ் மாலை யில்
ல்,
இன்றரைக் கண்ணுடையார் எங்கும்
இல்லை இமயம் என்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக் குக்கூ றிட்டநாள்