பக்கம்:நாவுக்கரசர்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் காட்டி யுள்ள வழியைக் கடைப்பிடித்துக் கொண்டு அவருடன் மேற் கொண்ட கற்பனைப் பயணத்தின் விளைவாக இந்நூலும் உருவாகியது. இதற்குப் பேராசிரியர் க. வெள்ளை வாரணனின் பன்னிரு திருமுறை வரலாறு (இரண்டு பகுதிகள்) என்ற நூலும், பூம்புகார்ப் பேரவைக் கல்லூரி வெளியீட்ாகிய அப்பர் பெருமான் வாழ்வும் வாக்கும் கை கொடுத்து உதவிப் பெருந்துணை புரிந்தன. இப் பெருமானின் வாழ்க்கை வரலாறு என் நெஞ்சை உருக்கு கின்றது. இந்த நூலின் அடிக்குறிப்புகளில் சேவித்த தலங்கள் பற்றிய விவரங்களையும் நூலில் அவர் பாடியுள்ள பதிகங்களின் ஒவ்வொரு பாடலையும் தந்துள்ளேன். மேலும் அறிய வேண்டுவோர் தேவார அடங்கன் முறையை,ப் படித்து அறிந்து கொள்ளலாம். இந்த நூலைக் கொண்டு அப்பர் பெருமான் வழிபட்ட திருத்தலங்களைச் சேவிக் கவும் அவர் பாடியுள்ள திருப்பதிகங்களை அநுபவித்து மகிழவும் இது வாய்ப்பாகவும் அமையும். படிப்போரின் மன நிலை, பக்தியில் வளர்ச்சி, இறைவனிடம் ஈடுபாடு இவற்றிற்கேற்பச் சிவாநுபவம் பெறத் துணை செய்யும். இஃதெல்லாம் கைகூடுவதற்கு அவனருளாலே அவன் தாள் வணங்கும் பேறும் பெற்றாக வேண்டும்.

சீமானுக்கு அழகு செழுங்கிளை தாங்குதலாகும். இவ்வு லகில் ஒரே செல்வச் சீமானாக இருப்பவன் ஏழுமலையான்; *அகலகில்லேன் இறையும்” என்று அவன் மார்பை விட்டு அகலாதிருக்கும் செல்வச் சீமாட்டியைத் தாங்கிக் கொண் டிருப்பவன். இந்நிலையில் நாடோறும் எண்ணற்ற பக்தர்கள் அவனுடைய கருவூலத்தை நிரப்பி வழியச் செய்து கொண்டிருக்கின்றனர். ஆகவே, இந்த உறுபெருஞ் செல்வத்தைச் செழுங்கிளையைச் சேர்ந்த பக்தர்கள் எழுதும் சமய வெளியீடுகளுக்கு வரையாது வழங்கும் நிதி உதவித் திட்டத்தில் இந்நூலும் நிதி உதவி பெற்று வெளி வருகின்றது. இந்த உதவி பெறாது போயின் 40 ஆண்டுகள் கல்வித் தொண்டாற்றி ஓய்வு ஊதியம் (Pension) பெறாது தவிக்கும் அடியேனால் இந்த நூலை வெளியிட்டிருக்க முடி யாது. இந்த வேங்கடத்தெம்மான் மேலும் வெளிவர இருக்கும் ஞானசம்பந்தர், தாயுமான அடிகள்,மாணிக்கவாசகர் வடலூர் வள்ளஷ், பட்டினத்தடிகள் போன்ற பக்திப் பனுவல் கட்கும் உதவுவான் என்ற் நம்:விக்கை என்பால் உண்டு. இவனது கருவியாக இயங்கி வரும் தேவஸ்தானத்தாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/37&oldid=634386" இலிருந்து மீள்விக்கப்பட்டது